For Daily Alerts
Just In
சத்தீஸ்கரில் 4 சகவீரர்களை சுட்டுக் கொன்ற துணை ராணுவப்படை வீரர்!
சத்தீஸ்கரில் 4 சக வீரர்களை துணை ராணுவப் படை வீரர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் 4 சக வீரர்களை துணை ராணுவ படை வீரர் ஒருவரே சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தின் பாசகூடாவில் மாவோயிஸ்டுகள் தேடுதல் நடவடிக்கையில் துணை ராணுவப்படையினர் ஈடுபட்டு வருகிறது. பாசகூடா முகாமில் நேற்று மாலை சனத்குமார் என்கிற வீரர் திடீரென ஏ.கே. 47 ரக துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சக வீரர்களை நோக்கி சுட்டார்.
இத்தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். துணை ராணுவப் படை வீரரின் இந்த வெறிச்செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
Comments
English summary
A CRPF jawan opened fire at his colleagues with an AK-47 assault rifle in Chhattisgarh.