தூங்கிய மனைவி, பிள்ளைகள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி.. கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு கொடூரமாக தற்கொலை
அமிர்தசரஸ்: பஞ்சாபில் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் வாங்கிய கடனை கட்ட முடியாத நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்தனர்.
பஞ்சாபின் ஃபரிட்கோட் மாவட்டத்தில் ஃபரிட்கோட்டின் காலர் கிராமத்தில் தலைவர் தரம்பால் வெளியில் 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்திருக்கிறார் ஆனால் இந்த ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்த கொரோனா வைரஸ் லாக்டவுன் காரணமாக அவரும் அவரது குடும்பத்தினரும் பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளார்கள். கடனை கட்ட அவர்களால் முடியவில்லை
இதனால் தரம்பால் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் ஒரு எல்பிஜி சிலிண்டரைக் கொண்டு வந்திருந்திருக்கிறார். அவர் அறையை உள்ப்பக்கமாக பூட்டி, 10 லிட்டர் மண்ணெண்ணெயை தன் மீதும், குடும்ப உறுப்பினர்கள் மீதும் ஊற்விட்டு சிலிண்டரின் ரெகுலேட்டரை அகற்றி தீ பிடிக்க வைத்துள்ளார். இதில் அந்த அறை வெடித்து சிதறி தீப்பிழம்பாக மாறியது. இதில் 4 பேரும் உடல் கருகி பலியாகினர். இந்த தகவலை ஃபரிட்கோட் எஸ்.பி. சேவா சிங் மல்ஹி தெரிவித்தார்.
இதனிடையே தரம்பால் தற்கொலைக்கான காரணத்தை கடிதமாக எழுதி வைத்துள்ளார். அதைக்கைப்பற்றிய போலீஸார், விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை செய்து கொண்ட தரம்பால் ரூ .8 லட்சம் கடன் வாங்கியதால், அதே தொகையை கொடுக்க முடியவில்லை. இதனால் தற்கொலை செய்து கொண்டதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.