For Daily Alerts
Just In
விமானத்தில் மூச்சுத்திணறல்... 4 மாத குழந்தை பலியான கொடூரம்
ஹைதராபாத் விமான நிலையத்தில் பாட்னா செல்லும் விமானத்தில் பயணித்த 4 மாத குழந்தை பலியானது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 மாத குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகிவிட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பெங்களூரில் இருந்து பாட்னா செல்லும் இண்டிகோ விமானத்தில் ஒரு தம்பதியர் 4 மாத ஆண் குழந்தையுடன் பயணித்தனர். அப்போது அக்குழந்தைக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டது.
இதையடுத்து அவசர அவசரமாக அந்த விமானமானது ஹைதராபாத் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயார் நிலையிலிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் இறப்புக்கு இண்டிகோ விமான நிறுவனம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
Comments
English summary
A four-month-old baby died after developing a breathing problem onboard a Patna-bound IndiGo flight at the Hyderabad airport.
Story first published: Wednesday, August 1, 2018, 11:24 [IST]