For Daily Alerts
Just In
ஆந்திரத்தில் படகு விபத்து: கோதாவரியில் அடித்து செல்லப்பட்ட 40 பேரின் நிலை என்ன?
ஆந்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் கோதாவரியில் 40 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
அமராவதி: ஆந்திரத்தில் படகு கவிழ்ந்த விபத்தில் கோதாவரியில் 40 பேர் அடித்து செல்லப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரியில் மும்மடிவரம் பகுதியில் 40-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றனர். அப்போது சிறிது தூரத்தில் காற்று அதிகம் வீசியதால் பாரம் தாளாமல் படகு கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்தவர்கள் நீரில் விழுந்தனர். 10 சிறுவர்கள் உள்பட 40 பேர் நீரில் மூழ்கினர். ஆற்றில் வெள்ள பெருக்கும் அதிக அளவில் இருப்பதால் அவர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இதனால் 40 பேரின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அடித்து செல்லப்பட்டவர்களின் நிலை குறித்து தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர்.
Comments
English summary
At least 40 people feared drowned in East Godavari river when a boat capsized on Saturday.
Story first published: Saturday, July 14, 2018, 17:56 [IST]