மகதாயி நதிநீர் பிரச்சனை: 400 கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்த டெல்லிக்கு பயணம்
மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கர்நாடகா விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த புறப்பட்டுள்ளனர்.
Recommended Video
பெங்களூரு: மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கோரி போராட்டம் நடத்த 400 கர்நாடகா விவசாயிகள் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மகதாயி நதிநீரை பகிர்ந்து கொள்வது தொடர்பாக கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா மாநிலங்களிடையே பிரச்சனை நீடிக்கிறது. கலசா பண்டூரி திட்டத்துக்கு 7.56 டிஎம்சி நீரை கர்நாடகா கேட்கிறது.
ஆனால் இதனை கோவா அரசு நிராகரித்துவிட்டது. இதனால் வட கர்நாடகாவில் தொடர்ந்து கொந்தளிப்பான நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் மகதாயி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்; இந்த விவகாரத்தில் ஜனாதிபதி, பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த கர்நாடகா விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக 400 கர்நாடகா விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடிய போது மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.