For Quick Alerts
For Daily Alerts
Just In
ஓகி புயலில் சிக்கி தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட 661 பேரை காணவில்லை- மத்திய அரசு
ஓகி புயலில் சிக்கி 400 தமிழக மீனவர்களைக் காணவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: ஓகி புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 400 பேர் உட்பட 661 பேரை காணவில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஓகி புயலைத் தொடர்ந்து கடற்படை, கடலோர காவல்படை, விமானப் படை இணைந்து டிசம்பர் 20-ந் தேதி வரை மொத்தம் 821 பேரை மீட்டுள்ளன. வர்த்தக கப்பல்கள் உள்ளிட்டவைகள் மூலமாக 24 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 453; கேரளாவில் 362; லட்சத்தீவில் 30 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதேபோல் மாநில அரசு தெரிவித்துள்ள தகவல்களின் படி டிசம்பர் 15-ந் தேதி வரை
தமிழகத்தில் 400; ,கேரளாவில் 261 பேர் என மொத்தம் 661 மீனவர்களை காணவில்லை.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Union Defence Ministry said that 400 of TamilNadu fisheremen still missing after the Cyclone Ockhi.