அவசர நிலை பிரகடன நாள்... இன்று கறுப்பு தினமாக கடைபிடிக்கும் பாஜக
Recommended Video
டெல்லி: 43 ஆண்டுகளுக்கு முன்னர் அவசர நிலையை பிரதமராக இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். இந்த நாளை கறுப்பு தினமாக நாடு முழுவதும் இன்று பாஜக கடைபிடிக்கிறது. மும்பையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
1975-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி நள்ளிரவு அவசர நிலை பிரகடனம் அமலுக்கு வந்தது. ஜனநாயகத்தை படுகொலை செய்துவிட்டு சர்வாதிகார ஆட்சியை நடத்தினார் இந்திரா காந்தி.
21 மாதங்கள் இந்த தேசம் இருளில் மூழ்கிக் கிடந்தது. ஜனநாயகத்துக்கு சாவு மணி அடித்த அவசர நிலை பிரகடன நாளை நாடு முழுவதும் பாஜக இன்று கறுப்பு நாளாக கடைபிடிக்கிறது.
நாட்டின் 22 இடங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு, கருத்தரங்குகளை இன்று பாஜக நடத்துகிறது. கர்நாடகாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், அஸ்ஸாமில் நடைபெறும் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், புனேயில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகாரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.