For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

லடாக் பகுதியில் நிலநடுக்கம்... குழுங்கிய வீடுகள்.. மக்கள் அதிர்ச்சி.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

Google Oneindia Tamil News

லடாக்: ஜம்மு காஷ்மீரில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசமான லடாக்கில் இன்று காலை 10.54 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தேசிய புவியியல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், லடாக் பகுதி அருகே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி இருந்தது.

5.3 magnitude earthquake hits Ladakh

இந்த நிலநடுக்கத்தால் சில வினாடிகள் பூமி குழுங்கியது. கட்டிடங்கள் திடீரென குழுங்கியதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படுமோ என்று பீதிக்குள்ளாகினர்.

ஆனால் மீண்டும் நிலநடுக்கம் ஏற்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாகவோ.உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டதாகவும் எந்த தகவலும் இல்லை. எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை என்று கூறப்படுகிறது. இந்த தகவலை போலீசார் தெரிவித்தனர்.

English summary
earthquake occurred at 10.54 am at a depth of 10 kilometre, measuring 5.3 on the Richter Scale hit the Union Territory of Ladakh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X