அசாம் மணிப்பூரில் நிலநடுக்கம்...உயிர்ச் சேதம் பொருட்சேதம் இல்லை...மக்கள் அச்சம்!!
திஸ்பூர்: வடகிழக்கு மாநிலங்களான அசாம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் நேற்று இரவு 11.08 மணிக்கு 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மணிப்பூரில் உள்ள தமெங்லாங் பகுதியில் நேற்று இரவு 28 அடி ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக தேசிய நிலநடுக்கவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் 3ஆம் தேதி அசாம் மாநிலத்தில் 4.2 ரிக்டர் அளவில் ஏற்பட்டு இருந்தது. குவஹாத்திக்கு மேற்கே 44 கி. மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது.
கொரோனா தொற்று... ஜெட் வேகத்தில் முந்திச் செல்லும் ஆந்திரா.... கர்நாடகா!!
இதற்கு முன்னதாக செப்டம்பர் 22ஆம் தேதியும் அசாமில் 4.4 ரிக்டர் அளவில் நிலடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இந்த மாநிலத்தின் காம்ருப் மாவட்டத்தில் இருக்கும் ஹஜோவின் வடமேற்கில் இந்த நிலநடுக்கும் மையம் கொண்டு இருந்தது. தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களில் குறிப்பாக அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவது அப்பகுதி மக்களை கலக்கம் அடையச் செய்துள்ளது.
நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.