இது என்ன வயிறா இல்லை காயலான் கடையா?
மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவரின் வயிற்றில் கிடந்த 5 கிலோ இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து நீக்கினர்.
Recommended Video
போபால்: மத்தியப் பிரதேசத்தில் மாநிலத்தில் ரகசியமாக இரும்பு பொருள்களை சாப்பிட்ட இளைஞரின் வயிற்றிலிருந்து 5 கிலோ எடை கொண்ட இரும்பு பொருள்களை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றினர்.
சாத்னா மாவட்டம், சோஹாவாலை சேர்ந்தவர் முகமது மக்சூட் (32). இவருக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 18-ஆம் தேதி சஞ்சய் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அந்த இளைஞரின் உடலை மருத்துவர்கள் ஆய்வு செய்து பல்வேறு பரிசோதனைகளை செய்தனர்.
இளைஞருக்கு எக்ஸ்ரே எடுத்தனர்
அந்த இளைஞருக்கு எக்ஸ்ரே பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவரது வயிற்றில ஏதோ சில பொருள்கள் இருப்பது போன்று கண்டுபிடிக்கப்பட்டது.
6 மருத்துவர்கள் சிகிச்சை
இளைஞர் முகமதுவுக்கு 6 மருத்துவர்கள் அடங்கிய குழு அறுவை சிகிச்சை செய்தது. அவரது வயிற்றிலிருந்து 10-12 ஷேவிங் பிளேடுகள், 4 பெரிய ஊசிகள், செயின், 263 நாணயங்கள், கண்ணாடி துண்டுகளை மருத்துவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அகற்றினர்.
அரிதான அறுவை சிகிச்சை
இதுகுறித்து அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் பிரியங்கா சர்மா செய்தியாளர்களிடம் கூறுகையில் இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்து 5 கிலோ இரும்பு பொருள்கள் அகற்றப்பட்டன. தற்போது அந்த இளைஞர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
ரகசியமாக சாப்பிட்டார்
அந்த இளைஞருக்கு மனநிலை சரியில்லாததால் பெற்றோருக்கு தெரியாமல் இரும்பு பொருள்களை வாயில் போட்டுக் கொண்டுள்ளார். இந்த மருத்துவமனைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் இளைருக்கு ரேவா மாவட்டத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றார் மருத்துவர்.