For Daily Alerts
Just In
3 வருடத்தில் 5 லட்சம் ஏக்கரில் ஆர்கானிக் விவசாயம்.. ரசாயன மருந்துகளுக்கு குட்பை
டெல்லி: இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும்வகையில் அடுத்த 3 வருடங்களில், 5 லட்சம் ஏக்கர் நிலம், ஆர்கானிக் விவசாய திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும், என்று, 2016-17ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
விவசாயிகள் நலனுக்காக ரூ.35984 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளேன். விவசாயிகளின் வருமானம், அடுத்த 5 வருடங்களில் இரண்டு மடங்காக உயரும். இயற்கை விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கத்தில், அடுத்த 3 வருடங்களில், 5 லட்சம் ஏக்கர் நிலம், ஆர்கானிக் விவசாய திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படும்.
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதிக்கு இந்த இயற்கை விவசாய உற்பத்தி பொருட்கள் பயன்படுத்தப்படும். ரசாயன உரம், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்பாடற்ற இதுபோன்ற ஆர்கானிக் விவசாயம் இக்காலகட்டத்திற்கு அவசியம்.
English summary
5 lakh acres to be brought under organic farming over a three year period, says FM Jaitley.