For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயற்சி.. தீவிரவாதிகள் 5 பேரை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

By Karthikeyan
Google Oneindia Tamil News

காஷ்மீர்: ஜம்மு - காஷ்மீரின் உரி செக்டாரில் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 5 பேரை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீர் மாநிலம் உரி செக்டார் பகுதியில் இன்று தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றுள்ளனர். பயங்கர ஆயுதங்களுடன் இந்திய எல்லைப் பகுதிக்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் நடமாட்டத்தை அறிந்த ராணுவம் உஷாராகியது. இதனையடுத்து இருதரப்பிடையே இன்று மாலை கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 5 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

5 terrorists killed in Uri

ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டபோதிலும், அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15 நாட்களில் பாகிஸ்தான் உதவியுடன் 4 முறை இந்தியாவிற்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சி செய்து உள்ளனர். இந்திய ராணுவம் அதனை முறியடித்து வருகிறது. கடந்த 48 மணி நேரங்களில் மட்டும் எல்லையில் நான்கு முறை பயங்கரவாதிகள் ஊடுருவல் முயற்சி சம்பவங்கள் நடந்து உள்ளது.

English summary
Army foils infiltration bid in Uri sector, 5 terrorists killed.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X