5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்.. நேபாளில் கொடூரம்
நேபாளில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறான்.
சிம்லா: நேபாளில் 5 வயது சிறுமியை 12 வயது சிறுவன் ஒருவன் கடத்தி பாலியல் வன்புணர்வு செய்து இருக்கிறான். அந்த சிறுவனின் குடும்பம் மிகவும் வசதியான குடும்பம் என்பதால் இந்த விஷயம் மூடி மறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் இதனால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமி மிகவும் மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். மருத்துவர்கள் அந்த சிறுமியின் ரத்த மாதிரியை எடுத்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
காணாமல் போன சிறுமி
நேபாளின் சிம்லாவில் உள்ள 5 வயது சிறுமி ஒருவர் நேற்று மாலை காணாமல் போய் இருக்கிறார். வெளியில் விளையாட சென்ற சிறுமி 3 மணி நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பாததால் அவளது பெற்றோர் அவளை தேடியுள்ளனர். 5 மணி நேரமாக குழந்தையை தேடியும் கிடைக்காத காரணத்தால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
சிறுவனே கடத்தல்
இந்த நிலையில் போலீஸ் அந்த பகுதிக்கு வந்து ஒவ்வொரு வீடாக சோதனை நடத்தினர். அப்போது அதே தெருவில் இருக்கும் 12 வயது சிறுவன் ஒருவன் அந்த சிறுமியை கடத்தி வீட்டில் வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த சிறுமியை இந்த பையன் பாலியல் வன்புணர்வு செய்ததும் தெரிய வந்து இருக்கிறது.
பெரிய ஆள்
அந்த சிறுவனின் தந்தை அந்த ஊரில் மிகவும் பெரிய ஆள் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக போலீஸ் முதலில் அந்த சிறுவனின் மீது வழக்கு பதிய மறுத்து இருக்கிறது. பின்னர் அந்த ஊர் மக்களும் அந்த சிறுமியின் பெற்றோரும் கொடுத்த அழுத்தத்தின் பேரில் அந்த சிறுவனின் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
சிகிச்சை
இந்த நிலையில் தற்போது அந்த சிறுமி மிகவும் மோசமான உடல் நிலையுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவரது உடல் கொஞ்சம் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. அந்த சிறுமியின் ரத்த மாதிரிகளை எடுத்து தற்போது மருத்துவமனை பரிசோதனை செய்து வருகிறது.