5 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை: 35 வயது வேன் டிரைவர் கைது
டெல்லி: பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வேன் டிரைவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் நடந்துள்ளது.
தெற்கு டெல்லியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் நர்சரிக்கு முந்தைய வகுப்பு படிக்கும், 5வயது சிறுமி பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். டெல்லியிலுள்ள கல்காஜி பகுதியில் உள்ள வீட்டில் இருந்து கிரேட்டர் கைலாஸ் பகுதியிலுள்ள பள்ளிக்கு தினமும் தனது பெற்றோர் ஏற்பாடு செய்த வாடகை வேனில் சிறுமி செல்வது வழக்கம்.இவ்வாறு செல்லும்போது சிறுமி தனியாக வேனில் இருப்பதை சாதகமாக்கி கொண்டு, வேன் டிரைவர் விபின்குமார் (35) தினமும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி கடந்த இரு வாரங்களால் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் பள்ளிக்கும் செல்லவில்லையாம். பள்ளிக்கு இனிமேல் போகமாட்டேன் என்றும் சிறுமி கூறியுள்ளார். இதற்கான காரணத்தை பெற்றோர் வலியுறுத்தி கேட்டபோதுதான், வேன் டிரைவரின் கொடூர முகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்நிலையில்தான் சம்பவம் குறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் வேன் டிரைவர் விபின் குமார் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 2 வாரங்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.