ஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில்.. பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிப்பு
ராய்ப்பூர்: ஜார்க்கண்டில் 6 ஆண்டுகளில் பசு வதை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவான 53 பேர் விடுவிக்கப்பட்டனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பசு கடத்தல் விவகாரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு 4 பேர் குற்றம்சாட்டப்பட்டனர். அது போல் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் பசு வதைக்காக மாடுகளை வாகனத்தில் ஏற்றிச் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது போல் விலங்கு வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளில் இது வரை 53 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் பசுவை வதைத்ததற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என கூறி 53 பேரும் விடுவிக்கப்பட்டனர்.
அந்த 53 பேரில் ஒருவர் பலி முண்டா. இவர் பசு வதை தடுப்பு சட்டத்தின் கீழ் தவறாக கைது செய்யப்பட்டு 89 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். குந்தி மாவட்டத்திலிருந்து அவரது கிராமத்திற்கு 21 முறை நடையாய் நடந்ததையும் வழக்கு செலவிற்காக உறவினர்களிடம் ரூ 14 ஆயிரம் செலவிட்டதையும் அவரால் மறக்க முடியவில்லை.
தான் உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் என்கிறார். அவர் கடந்த ஜனவரி மாதம் போதிய ஆதாரம் இன்றி விடுவிக்கப்பட்டார். கடந்த வாரம் ஜார்க்கண்டில் ஒரு மாவட்டத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரை பசு வதை செய்ததாக கடந்த வாரம் 3 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கினர். அது போல் முண்டாவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 2017ம் ஆண்டு பசு பாதுகாப்பு குழுவினரால் தாக்கப்பட்டார்.