For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பூட்டிய வீடு.. வெடித்துச் சிதறிய ஃபிரிட்ஜ்.. 5 குழந்தைகள் உள்பட 6 பேர் கருகி பலி!

Google Oneindia Tamil News

காசியாபாத்: எல்லாமே 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத்தில் பூட்டிய வீட்டுக்குள் குளிர்சாதன பெட்டியில் மின்கசிவால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 குழந்தைகள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் இறந்த 5 குழந்தைகளும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் வேதனையாக உள்ளது. காஸியாபாத்தின் லோனி பகுதியில்தான் இந்த விபத்து நடந்தது.

6 persons including 5 children charred to death in ghaziabad fire mishap

அந்தப் பகுதியில் உள்ள மெளலானா ஆசாத் காலனிப் பகுதியில் வசித்து வந்தவர் பர்வீன். 40 வயதாகிறது. இவர் தனது வீட்டில் பிள்ளைகள் பாத்திமா (12), சாஹிமா (10), ரதியா (8), அப்துல் அஜீம் (8), அப்துல் அஹாத் (5) ஆகியோருடன் இரவில் தூங்கிக் கொண்டிருந்தார்.

அப்போது வீட்டில் இருந்த ஃபிரிட்ஜில் மின்கசிவு காரணமாக தீப்பிடித்துக் கொண்டு வெடித்துச் சிதறியது. இதில் பர்வீன் உள்பட 6 பேருமே தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். தீப்பிடித்துக் கொண்டபோது அவர்கள் படுத்திருந்த அறை முழுவதும் தீ பரவி விட்டதால் யாரும் தப்ப முடியாமல் போனது.

இந்த சம்பவம் காஸியாபாத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
6 persons including 5 children killed in ghaziabad fire mishap
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X