ராஜஸ்தான்: கொரோனாவால் 60 வயது மூதாட்டி மரணம்.. மாநிலத்தில் முதல் பலி
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி ஒருவர் பலியாகிவிட்டார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் முதல் பலி ஏற்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவால் 191 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 41 பேர் டெல்லி ஜப்லீகீ ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டோராவர்.
அலறும் அமெரிக்கா.. அடுத்தடுத்து உயிர்பலி.. அதி வேகமாக பரவும் கொரோனா.. தவிக்கும் டிரம்ப் அரசு!
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம் பிகானெரில் உள்ள மருத்துவமனையில் கொரோனா தொற்றால் ஒரு மூதாட்டி அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 60 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி அவர் இன்று இறந்துவிட்டார்.
A 60-year-old #COVID19 positive woman patient passed away in Rajasthan's Bikaner, earlier today. 12 new positive cases confirmed in Rajasthan, taking the total number of cases to 191 including 41 Tablighi Jamaat (Delhi) attendees: State Health Department
— ANI (@ANI) April 4, 2020
Recommended Video
இதன் மூலம் ராஜஸ்தானில் முதல் பலி ஏற்பட்டுள்ளது. இன்று மேலும் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.