மே.வங்கத்தில் மருத்துவர்கள் போராட்டம் தீவிரம்- 119 பேர் கூண்டோடு ராஜினாமா!
கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கு எதிரான மருத்துவர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் உட்பட 119 பேர் பணியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கொல்கத்தா என்.ஆர்.எஸ். மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை நோயாளியின் உறவினர் தாக்கினார். இதையடுத்து பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
இந்தப் போராட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அரசியலாகப் பார்த்தார். பாஜகவின் தூண்டுதலின் பேரில்தான் இப்போராட்டம் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார்.
West Bengal: 16 doctors of the RG Kar Medical College & Hospital, Kolkata submit their resignation stating, "In response to prevailing situation as we are unable to provide service, we would like to resign from our duty," pic.twitter.com/a3eVzs6ZLG
— ANI (@ANI) June 14, 2019
இதனால் கொந்தளித்த மருத்துவர்கள், நாடு தழுவிய போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன், டெல்லியில் மருத்துவர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் உட்பட மொத்தம் 119 பேர் தாங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். மேலும் தங்களை விமர்சித்த முதல்வர் மமதா பானர்ஜி மன்னிப்பு கேட்கவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.