For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஷ்மீரில் பாக் தாக்குதல்.. 3 இந்திய வீரர்கள் வீரமரணம்..இந்தியாவின் பதிலடியில் 7-8 பாக் வீரர்கள் பலி

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் மற்றும் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். இதையடுத்து இந்திய ராணுவம் நிகழ்த்திய பதிலடி தாக்குதலில் 7-8 பாக் வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்தியா - பாக். வீரர்கள் இடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இன்று காலையில் இருந்து காஷ்மீர் எல்லையில் அவ்வப்போது அத்துமீறி வந்த பாகிஸ்தான் ராணுவ படை, சில மணி நேரங்களுக்கு முன் உரி பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தியது.

அதோடு இன்னொரு பக்கம் குரேஸ் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

 எத்தனை பேர்

எத்தனை பேர்

உரி பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் 3 இந்திய பொதுமக்கள் பலியாகி உள்ளனர். அதோடு 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பதிலடி

பதிலடி

இதையடுத்து உரி பகுதிக்கு விரைந்த இந்திய ராணுவம் அங்கு உடனே பதிலடி தாக்குதலை நடத்தியது . இந்திய படையின் பதில் தாக்குதலில் 7 - 8 பாக் வீரர்கள் பலி ஆகியுள்ளனர். இதில் 10 பாகிஸ்தான் வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த எண்ணிக்கை விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.

அழிப்பு

அழிப்பு

பாகிஸ்தானின் எஸ்எஸ்ஜி படைப்பிரிவு கமாண்டோ 3 பேரும் தாக்குதலில் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானின் முகாம்கள் எல்லையில் அழிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் வைத்திருந்த சுரங்கங்கள், டேங்கர்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

பதிலடி

பாகிஸ்தான் வீரர்களின் திடீர் தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த தாக்குதல் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூடு காரணமாக எல்லையில் கடுமையான பதற்றம் நிலவி வருகிறது.

English summary
7-8 Pakistan Army soldiers killed in retaliatory firing by Indian Army in Uri after Pak force killed 3 Indian soldiers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X