கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி
கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்குமாடி கட்டடத்தில் 13 ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்க போராடிய 7 பேர் பலியாகிவிட்டனர்.
கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் ரயில்வே கட்டடம் உள்ளது. இங்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 13ஆவது மாடியில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியது. இதனால் அப்பகுதியில் தீப்பிழம்பு போல் காட்சியளித்தது.
இதையடுத்து தகவலறிந்து தீயணைக்க முதலில் 10 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்குப்பட்டன. ஆனாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து 110 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 6500 வீரர்கள் ஈடுபட்டனர். இதில் 4 தீயணைப்பு வீரர்கள், இரு ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள், ஒரு கொல்கத்தா போலீஸ் அதிகாரி என 7 பேர் பலியாகிவிட்டனர்.
Tragic news from Kolkata tonight
— Indrajit Kundu | ইন্দ্রজিৎ - কলকাতা (@iindrojit) March 8, 2021
7 persons have died in a major blaze at an @EasternRailway building on Strand Road
Four fire fighters, a Kolkata police perssonel, and RPF jawan among deceased. Terrible tragedy pic.twitter.com/MYB5ckjcj3
சம்பவ இடத்தை முதல்வர் மம்தா பானர்ஜி பார்வையிட்டார். மீட்பு பணிகளை துரிதமாக மேற்கொள்ள உத்தரவிட்டார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சமும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் வழங்கப்படும் என மம்தா அரசு அறிவித்துள்ளது.