மோடி பதவியேற்பு விழா மட்டும் ஏன் வித்தியாசமானது?
டெல்லி: நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா ஏன் வித்தியாசமானது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நரேந்திர மோடி இந்தியாவின் 15வது பிரதமராக இன்று மாலை பதவியேற்றார். இதனால் டெல்லியே விழாக்கோலம் பூண்டிருந்தது என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் மோடியின் பதவியேற்பு விழா மட்டும் ஏன் வித்தியாசமானது என்பதை பார்ப்போம்.
ராஷ்ட்ரபதி பவன்
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடந்த மிகப் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று இன்று நடந்த பதவி ஏற்பு விழா. இந்த விழாவில் 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
ஒளிபரப்பு
பதவியேற்பு விழா தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சி தூர்தர்ஷன் நெட்வொர்க் மூலம் சார்க் நாடுகளில் ஒளிபரப்பப்பட்டது.
சார்க்
சார்க் நாடுகளின் தலைவர்கள், தூதரக அதிகாரிகள், ஆளுநர்கள், முதல்வர்கள் என்று முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். இந்திய பிரதமர் பதவியேற்பு விழாவில் சார்க் நாடுகளின் தலைவர்கள் கூட்டாக கலந்து கொண்டது இதுவே முதல் முறை ஆகும்.
டிடி
மோடி பதவியேற்பு விழா தூர்தர்ஷனில் 15 பிராந்திய மொழிகள் உள்ளிட்டவற்றில் ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு வீடியோ இந்தியா மற்றும் சார்க் நாடுகளைச் சேர்ந்த அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் அளிக்கப்பட்டது.
இசைக்குழு
பதவியேற்பு விழாவின்போது இசைக்குழு தேசபக்தி பாடல்கள் மற்றும் இந்தி படங்களில் வரும் தேசபக்தி பாடல்களை இசைத்தது.
வாகனங்கள்
நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் நடக்க முடியாதவர்களுக்காக 12 கோல்ப் கார்ட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆம்புலன்ஸ்
நிகழ்ச்சி நடந்த இடத்தில் முன்னேற்பாடாக ஆம்புலன்ஸ்கள் மற்றும் டாக்டர் குழுக்கள் ஆங்காங்கே இருந்தார்கள்.