For Daily Alerts
Just In
180 கி.மீ. வேகத்தில் இயக்கிய கார்.. குண்டூரில் விபத்தில் சிக்கிய கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி
குண்டூர்: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கார் விபத்தில் சிக்கி 7 கல்லூரி மாணவர்கள் பலியாகிவிட்டனர்.
எடுகுரு கிராமத்தில் உள்ளது ஆர்விஆர் பொறியியல் கல்லூரி. இந்த கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 7 பேர் புத்தாண்டையொட்டி ஒரு காரில் எங்கோ சென்று கொண்டிருந்தனர்.
அப்போது 180 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்தது. அந்த நேரம் நிலைத்தடுமாறிய கார் தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 7 பேரும் மிகக் கொடூரமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
English summary
The college students of Guntur district meet with an accident because of rash driving results all the 7 died.
Story first published: Monday, December 31, 2018, 17:29 [IST]