கராத்தே பயிற்சியின் போது காயம்.. 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம்
கராத்தே பயிற்சியின் போது காயம் அடைந்த 7 வயது சிறுமி பரிதாபமாக பலியான சோகம் நொய்டாவில் நடந்துள்ளது.
நொய்டா: கராத்தே பயிற்சியில் காயம் அடைந்த 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் கசல் யாதவ் (7) என்ற சிறுமி படித்து வந்தாள். பள்ளியில் வழங்கப்பட்டு வரும் தற்காப்பு கலையான கரேத்தே பயிற்சியில் இணைந்து கசால் யாதவ் பயிற்சி பெற்று வந்துள்ளாள்.
இந்நிலையில் கடந்த செவ்வாய் கிழமை அன்று, நடைபெற்ற கராத்தே பயிற்சியில் சிறுமி கசல் யாதவ் கலந்து கொண்டார். இதையடுத்து சிறுமியின் தந்தைக்கு பள்ளியில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் சிறுமிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளதாகவும், உடனே வந்து அழைத்து செல்லுமாறும் கூறப்பட்டது.
அவர் பள்ளிக்கு செல்வதற்குள், சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மருத்துவமனைக்கு சென்று பார்க்கும் போது, சிறுமி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. கராத்தே பயிற்சியின் போது, காயம் ஏற்பட்டு உரிய மருத்துவ வசதி செய்து தரப்படாததே உயிரிழப்புக்கு காரணம் என்று, சிறுமியின் தந்தை கூறியுள்ளார்.