70 வயது மூதாட்டி பலாத்காரம்.. பிளம்பரின் அட்டகாசம்.. பாட்டி தற்கொலை!
கண்ணூர்: கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பிளம்பர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். இந்த வயதில் இப்படி ஒரு கொடுமையா என்ற வேதனையில் அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
வயது வித்தியாசம் இல்லாமல் இப்போது பாலியல் வக்கிரங்கள் அதிகரித்து விட்டன. சிறு குழந்தை முதல் பாட்டிகள் வரை காமக் கொடூரர்கள் விடுவதில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகி விட்டது.
குறிப்பாக கேரளாவில் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் கூட பிரபல நடிகைக்கு பாலியல் கொடுமை நடந்தது. இந்த நிலையில் அங்கு ஒரு 70 வயது பாட்டியை ஒரு பிளம்பர் பாலியல் பலாத்காரம் செய்யப் போய் தற்போது அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணூர் மாவட்டம் இரிட்டி நகரைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ராஜீவன் என்ற 45 வயது நபரைப் போலீஸார் பிடித்தனர். விசாரணையில் அவர்தான் இந்த கொடுமையைச் செய்தவர் என்று தெரிய வந்தது. இவர் ஒரு பிளம்பர் ஆவார். சம்பவ நாளன்று ராஜீவன் பாட்டி வீட்டுக்கு பிளம்பிங் வேலைக்காக வந்துள்ளார்.
அப்போது பாட்டியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ராஜீவன் இரிட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளராக இருக்கிறாராம்.