மைசூரு வங்கியில் பணம் மாற்ற வந்த முதியவர் வங்கி வாசலில் மயங்கி விழுந்து பலி!
மைசூரு வங்கியில் பணம் மாற்ற முதியவர் கியூவில் நின்றபடியே உயிரிழந்தார்.
மைசூரு: செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்ற மைசூரு வங்கிக்கு வந்த முதியவர் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் 8-ந் தேதி ரூபாய் நோட்டுகள் செல்லாது அறிவிப்பு வெளியானது. அதன் பின்னர் பணமாற்றம், ஏடிஎம் கியூ உள்ளிட்ட காரணங்கள் நாடு முழுவதும் 55 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்றம், பொதுமக்களின் துயரம் நீடித்தால், கலவரமே வெடிக்கலாம் எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வங்கிகளில் முதியவர்கள் மட்டுமே பணத்தை மாற்றம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே கர்நாடகாவின் மைசூரு வங்கியில் பழைய ரூபாய் நோட்டை மாற்ற முதியவர் ஒருவர் கியூவில் நின்றிருந்தார். திடீரென அந்த கியூவில் நின்றபடியே அவர் மயங்கி விழ சிறிதுநேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
பணமாற்றத்தின் போது தொடரும் உயிரிழப்புகள் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.