சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலி
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகி உள்ளனர்.
சுக்மா: சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 9 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டம் கிஸ்தாராம் பகுதியில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டையை சிஆர்பிஎப் வீரர்கள் மேற்கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து கண்ணிவெடியை வெடிக்கச் செய்தனர்.
இதில் 9 சிஆர்பிஎப் வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்தனர். இவர்களில் 4 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதைத் தொடர்ந்து தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது சுக்மா வனப்பகுதியில் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#SpotVisuals from the site of IED blast by Naxals in Kistaram area of #Chhattisgarh's Sukma, 9 CRPF personnel have lost their lives. pic.twitter.com/iN4bQCETHH
— ANI (@ANI) March 13, 2018
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதே சுக்மா மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 25 சிஆர்பிஎப் வீரர்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.