For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போபால் சிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் கொலை

By Siva
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய 8 சிமி தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நாட்டில் உள்ள பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

8 SIMI operatives who fled from Bhopal jail killed

இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த 8 சிமி தீவிரவாதிகள் பாதுகாவலரை கொலை செய்துவிட்டு இன்று அதிகாலை தப்பியோடினர்.

தப்பியோடியவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் போபாலின் புறநகர் பகுதியில் உள்ள எய்ன்ட்கேதி கிராமத்தில் வைத்து நடத்தப்பட்ட என்கவுன்ட்டரில் 8 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநில சிறையில் இருந்து சிமி தீவிரவாதிகள் தப்பியோடியுள்ளது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக போபால் சிறையில் இருந்து 10 சிமி தீவிரவாதிகள் தப்பிச் சென்றனர்.

அதில் 5 பேர் உடனடியாக பிடிக்கப்பட்டனர். ஆனால் மற்றவர்களை பிடிக்க முடியவில்லை. அப்படி தப்பியோடியவர்கள் பல்வேறு குண்டுவெடிப்பு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டனர். அதில் 3 பேர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர், மீதமுள்ளவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒடிஷாவில் கைது செய்யப்பட்டனர்.

English summary
In a shocking incident, 8 operatives of the outlawed, Students Islamic Movement of India, escaped from the Bhopal central jail in Madhya Pradesh after killing a security guard. 8 operatives have been killed in an encounter later.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X