For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கிய 8 சிமி தீவிரவாதிகள்- சுட்டுக் கொன்ற போலீஸ்!

சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியதாக கூறப்படும் 8 சிமி தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.

By Mathi
Google Oneindia Tamil News

போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

போபால் சிறையில் ஷேக் முஜீப், கலீத், அகீல், மஜித், ஜாஹிர் ஹுசேன், மொகம்மத் சாலி, ஷேக் மெகபூப், அஜ்மத் ஆகிய 8 சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர்கள்.

8 SIMI operatives who escaped from Bhopal jail killed in encounter

போபால் சிறையில் இன்று அதிகாலை சிறைக்காவலரை படுகொலை செய்துவிட்டு போர்வைகளை கயிறாக்கி 8 பேரும் தப்பிச் சென்றனர். 8 பேரும் போபால் புறநகர் பகுதியான இன்ந்த்கெடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 8 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் 8 பேரும் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
The 8 SIMI operatives who escaped from the Bhopal central jail this morning have been killed in an encounter at Einthkedi village on the outskirts of Bhopal, Madhya Pradesh. They have been identified as Sheikh Mujeeb, Khaled, Aqeel, Majid, Zaqir Hussain, Mohammad Saliq, Sheikh Mehboob and Amjad.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X