சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கிய 8 சிமி தீவிரவாதிகள்- சுட்டுக் கொன்ற போலீஸ்!
சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியதாக கூறப்படும் 8 சிமி தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றுள்ளனர்.
போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் சிறையில் இருந்து தப்பி போபால் புறநகரில் பதுங்கியிருந்த 8 சிமி தீவிரவாதிகளும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
போபால் சிறையில் ஷேக் முஜீப், கலீத், அகீல், மஜித், ஜாஹிர் ஹுசேன், மொகம்மத் சாலி, ஷேக் மெகபூப், அஜ்மத் ஆகிய 8 சிமி தீவிரவாதிகள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2 பேர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பில் தொடர்புள்ளவர்கள்.
போபால் சிறையில் இன்று அதிகாலை சிறைக்காவலரை படுகொலை செய்துவிட்டு போர்வைகளை கயிறாக்கி 8 பேரும் தப்பிச் சென்றனர். 8 பேரும் போபால் புறநகர் பகுதியான இன்ந்த்கெடியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 8 பேரும் தப்பி ஓட முயற்சித்தனர். இதனால் 8 பேரும் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாதிகள் 8 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.