For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்பத் தகராறு: ஜம்மு காஷ்மீரில் 8 வயது மகளின் தலையை துண்டித்துக் கொன்ற தந்தை

By Siva
Google Oneindia Tamil News

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் குடும்பத் தகராறில் 8 வயது மகளின் தலையை துண்டித்து கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் தெஹ்சில் தாலுகாவில் உள்ள கரானா கிராமத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன். அவர் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜாகிர் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த தனது 8 வயது மகள் மசரத் நாஸின் தலையை துண்டித்தார்.

தலை துண்டிக்கப்பட்ட சிறுமியின் உடல் வீட்டு வாசலில் கிடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிறுமியின் உடலை கைப்பற்றினர்.

மேலும் இந்த சம்பம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் ஜாகிரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முதல்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை தான் இந்த கொலைக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

English summary
In a shocking incident, an eight-year-old girl was on Sunday beheaded reportedly by her father as result of family feud in Poonch district of Jammu and Kashmir.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X