Breaking News: சேலம் பசுமை சாலைக்கு 85% நிலத்தை அளவு எடுத்து விட்டோம்.. முதல்வர் அறிவிப்பு
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கோவை: சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு 85% நிலத்தில் இதுவரை அளவீடு எடுக்கப்பட்டுள்ளது, என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்தார். அதில், சேலம் சாலைக்கு 85% பகுதிகளில் நில அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. தருமபுரியில் இதுவரை 90 சதவிகிதம் நிலம் ல அளவீடு எடுக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் நிலம் அளவீடு எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. என்றுள்ளார்.
கூமாங்காடு கிராமத்தில் சீமான் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது
ஆட்சியாளர்களும் காவலர்களும் ஜனநாயகத்தின் துகிலுரிந்து துச்சாதனர்கள் ஆகியுள்ளார்கள்
சீமானை கைது செய்தது சட்ட விரோதச் செயலாகும் - பெ. மணியரசன்
தமிழக அரசின் முட்டை டெண்டரில் முறைகேடு எதுவும் இல்லை
இதுவரை சரியாக முட்டை டெண்டர் விடப்பட்டுள்ளது
செலவை குறைக்கவே முட்டை டெண்டர் நடத்த திட்டமிடப்பட்டது
எல்லா மாதமும் டெண்டர் நடத்த முடியாது
ரூ.2031 கோடிக்குத்தான் முட்டை டெண்டர் விடப்பட்டது
ரூ.5000 கோடி ஊழல் என்பதெல்லாம் சுத்த பொய்
திமுக ஆட்சியில்தான் டெண்டரில் முறைகேடு நடந்தது
தமிழக அரசு இப்போது நன்றாக செயல்படுகிறது
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புகார் வைக்கப்படுகிறது
வருமான வரி சோதனை சாதாரணமான ஒன்று
அவர்களுக்கு சந்தேகம் வந்தால், புகார் வந்தால் சோதனை செய்வார்கள்
சேலம் சாலைக்கு 85% நிலம் எடுக்கப்பட்டுள்ளது