மகாராஷ்டிராவில் இருந்து ஹரித்துவாருக்கு ரயிலில் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு
ஹரித்துவார்: மகாராஷ்டிராவில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவார் திரும்பிய 87 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் இருந்து பிற மாநிலங்களுக்கு ரயில்கள் மூலம் செல்வோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிக அதிகமாவதற்கும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்புவர்கள்தான் காரணம். இதேபோல் கர்நாடகாவிலும் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பியவர்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மகாராஷ்டிராவில் பரிதவித்தவர்கள் ஹரித்துவாருக்கு சிறப்பு ரயில் மூலம் சென்றடைந்தனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் முதலில் 55 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. பின்னர் மேலும் 32 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
மகா. முன்னாள் முதல்வர் அசோக் சவாணுக்கு கொரோனா பாதிப்பு
மொத்தம் 1,500 பயணிகள் மகாராஷ்டிராவில் இருந்து வந்ததால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது என்கின்றனர் உத்தரகாண்ட் மாநில அதிகாரிகள்.