மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 9 ராணுவ வீரர்கள் மாயம்.. போலீசில் புகார்
மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சசிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
காஷ்மீர்: மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சிறப்பு ரயிலில் சென்ற ராணுவ வீரர்களில் 9 பேர் காணாமல் போய் இருக்கிறார்கள்.
தற்போது காஷ்மீரில் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக வடகிழக்கு மாநிலங்களில் பாதுகாப்பில் இருந்த சில பாதுகாப்பு வீரர்கள் காஷ்மீருக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் மொத்தம் 83 வீரர்கள் நேற்று மேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீருக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இன்று மாலை இந்த ரயில் காஷ்மீர் வந்தடைந்தது.
இந்நிலையில் முகல்சராய் ரயில் நிலையத்தில் சோதனை செய்யப்பட்ட போது, ரயிலில் 74 வீரர்கள் மட்டுமே இருந்துள்ளனர். மொத்தமாக 9 வீரர்கள் காணாமல் போய் உள்ளனர்.
இவர்கள் எப்படி காணாமல் போனார்கள், எங்கே இறங்கினார்கள் என்ற விவரம் தெரியவில்லை. இவர்களை தேடும்பணியில் பாதுகாப்பு துறை இறங்கியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.