காஷ்மீர் எல்லையில் பாக்.- இந்திய ராணுவம் கடும் மோதல்.. 9 இந்திய வீரர்கள் பலியானதாக பாக். டிவிட்!
ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில் இன்று காலையில் இருந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இன்று காலையிலேயே காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. அங்கு இருக்கும் தீவிரவாத முகாம்களை குறி வைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது.
முக்கியமாக பிஓகே எனப்படும் பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியான டாங்தார் பகுதியில் தாக்குதல் நடந்தது. அதேபோல் நீலம் வாலி பகுதியிலும் இந்த தாக்குதல் நடந்தது.
இந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி
மாறி மாறி தாக்குதல்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் அந்த பகுதியில் இருந்து நாட்டிற்குள் ஊடுருவதாக வெளியான தகவலை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவமும் இதனால் அந்த பகுதியில் திருப்பி தாக்குதல் நடத்தியது. காலை 9 மணியில் இருந்து மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
பாகிஸ்தான் பலி
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது. அதேபோல் 3 தீவிரவாதிகள், பொதுமக்கள் 2 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்திய ராணுவம்
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 9 பேர் பலியானதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
|
இந்திய தரப்பு
இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டிவிட் செய்துள்ளார். இந்திய தரப்பில் இந்திய ராணுவ வீரர்கள் பலியானது தொடர்பாக எந்த செய்தியும் வெளியாகவில்லை. ஆனால் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 5 பேர் பலியானது உறுதி என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
பதற்றம்
தற்போது ராணுவ டாங்கிகள் மூலம் காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய வீரர்கள் சிலர் மோசமாக இதில் காயம் அடைந்துள்ளனர். இதற்கு தக்க பதிலடி வழங்கப்பட்டு வருகிறது என்று இந்திய ராணுவம் சார்பாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.