வன்புணர முடியாத கோபத்தில் கொலை.. போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்த 16 வயது சிறுவன்
போபாலில் 13 வயது சிறுமிக்கு தீ வைத்து 16 வயது சிறுவன் கொலை செய்து இருக்கிறான்.
Recommended Video
போபால்: போபால் அருகே இருக்கும் ராஜ்கிராஹ் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்து இருக்கிறது. அந்த 13 வயது சிறுமியை முதலில் அந்தச் சிறுவன் வன்புணர்வு செய்ய முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
போலீஸ் இதுகுறித்து தற்போது தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஏற்கனவே டெல்லி, உத்தர பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக அதிக வன்முறை நடந்து கொண்டு இருக்கிறது. இதில் மத்திய பிரதேசமும் சேர்ந்துள்ளது.
இந்தச் சிறுமி தலித் சமூகத்தை சேர்ந்த சிறுமி என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்தச் சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறாள்.
வன்புணர்வு
அந்தச் சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்துத் தெருவை சேர்ந்த அந்தச் சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து உள்ளான். பின் அந்தச் சிறுமியை அறைக்குள் தள்ளி அடித்துள்ளான். பின் வன்புணர்வு செய்ய முயற்சி செய்து இருக்கிறான்.
|
தீ
ஆனால் இதற்கு அந்தப் சிறுமி சம்மதிக்காமல் முரண்டு பிடித்துள்ளாள். இதனால் கோபம் அடைந்த அவன் உடனே அந்த சிறுமி மீது மண்ணெண்ணெய் எடுத்து வந்து ஊற்றியுள்ளான். அதேபோல் அங்கேயே கொளுத்திவிட்டு அங்கிருந்து ஓடி இருக்கிறான்.
ஓட்டம்
தற்போது போலீஸ் இவன் மீது வழக்குப் பதிந்துள்ளது. அவனை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. இவன் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளான். அந்தச் சிறுமி 6 வகுப்போடு படிப்பை நிறுத்தி இருக்கிறாள்.
மருத்துவமனை
தற்போது அந்தச் சிறுமி பாதி காயங்களுடன் வாக்குமூலம் அளித்து இருக்கிறாள். இன்னும் அவள் மோசமான நிலையில் இருப்பதாகவே மருத்துவர்கள் கூறியுள்ளனர். இன்னும் 75 சதவிகித காயங்கள் சரியாகவில்லை என்றுள்ளனர்.