For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாய் இறந்தது தெரியாமல் பசியில் தாய்ப்பால் குடித்த குழந்தை.. இதயத்தை நொறுக்கும் வீடியோ

மத்திய பிரதேசத்தில் ரயில்வே டிராக் அருகே தாய் இறந்தது தெரியாமல் 17 மாத குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்த வீடியோ வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

தமோக்: மத்தியப்பிரதேசத்தில் ரயில்வே டிராக் அருகே தாய் இறந்தது தெரியாமல் பசியால் தவித்த குழந்தை அவரிடம் தாய்ப்பால் குடித்தது. இதயத்தை நொறுக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இன்று காலை ரயில்வே டிராக்கில் ஒரு பெண்மணி இறந்துகிடந்துள்ளார். இதனைப் பார்த்த ரயில்வே ஊழியர்கள் அருகில் சென்று பார்த்துள்ளனர்.

A 17 month old baby was feeding from her mother without knowing mothers death

அப்போது அந்த பெண்ணுக்கு பக்கத்தில் அவரது குழந்தை தாய்ப்பால் குடித்துக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர். பசியால் தவித்த அந்த 17 மாத குழந்தை தாய் இறந்துவிட்டார் என்பதை அறியாமல் பால் குடித்துக்கொண்டிருந்ததை கண்டு கண்கலங்கினர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்த ஊழியர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பெண்ணின் மூக்கு மற்றும் காதுகளில் இருந்து ரத்தம் வந்ததால், அவர் விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது, ரயில்வே போலீசாரிடம் உள்ள அந்த குழந்தை பத்திரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அப்பெண்ணின் வீட்டு முகவரியை கண்டுபிடித்து தகவல் தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் குழந்தையை பாதுகாப்பாக ஒப்படைப்போம் என்றும ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.

English summary
A lady was dead near the railway track. A 17 month old baby was feeding from her mother without knowing mothers death. This video is currently breaking out of the heart.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X