மத்திய பிரதேசத்தில் 2 மாடி கட்டிடம் இடிந்து விபத்து.. இடிபாடுகளில் சிக்கிய பலர்.. தீவிர மீட்பு பணி!
போபால்: மத்திய பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலர் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ராய்காட் பகுதியில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.நேற்று மகாராஷ்டிராவில் ராய்காட் மாவட்டத்தில் உள்ள மஹத் தேசில் பகுதியில் பெரிய கட்டிட விபத்து ஏற்பட்டது.
மகாராஷ்டிராவை தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் இரண்டு மாடி கட்டிடம் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. லால் கேட் பகுதிக்கு அருகே உள்ள கட்டிடம் இடிந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேவாஸ் என்ற இடத்தில் இந்த இரண்டு மாடி குடியிருப்பு அமைந்துள்ளது.
மகாராஷ்டிரா கட்டிட விபத்து.. இடிபாடுகளில் சிக்கி 13 பேர் பலி.. 10 பேர் காயம்.. மீட்பு பணி தீவிரம்!
விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 7 பேர் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
இன்னும் பலர் உள்ளே சிக்கி இருக்க வாய்ப்புள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை தீவிரமாக நடந்து வருகிறது.