For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை.. சிசிடிவி காட்சியால் அம்பலம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லி மெட்ரோ ஸ்டேஷனில் பெண் பத்திரிகையாளருக்கு பாலியல் தொல்லை..வீடியோ

    டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்தில் 25 வயது இளம் பெண் பத்திரிகையாளர் பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சிசிடிவி காமிராக்கள் மூலம், இந்த சம்பவம் பதிவாகியுள்ள நிலையில், போலீசார் நடத்திய தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

    பெண்களுக்கு பாதுகாப்பற்ற நகரமாக டெல்லி மாறியுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கு இச்சம்பவம் மேலும் வலு சேர்க்கிறது.

    தப்பிய பெண்

    தப்பிய பெண்

    மத்திய டெல்லியிலுள்ள ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையத்தில்தான் இந்த மோசமான சம்பவம் திங்கள்கிழமை நடந்துள்ளது. மெட்ரோ ரயிலின் சுரங்க பாதை பகுதியில் பெண் பத்திரிகையாளர் படிக்கட்டில் நடந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பக்கமாக இருந்து வந்த அந்த நபர், பெண்ணின் அந்தரங்க உறுப்பை குறிவைத்து பிடிக்கிறார். முதலில் சற்று தடுமாறிய அந்த பெண், பிறகு அவனது கையை தட்டிவிடுகிறார்.

    விரட்டிய பெண்

    விரட்டிய பெண்

    இதையடுத்து பயந்துபோன அந்த நபர் அங்கிருந்து தப்பியோடுகிறார். ஆனால், தீரமிகுந்த அந்த பெண் விடவில்லை. அவனை துரத்தியபடியே ஓடுகிறார். இந்த காட்சிகள் அங்குள்ள ஒரு சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தன.

    போலீசார் தீவிரம்

    போலீசார் தீவிரம்

    நடந்த சம்பவத்தை சும்மாவிடவில்லை அந்த பெண் பத்திரிகையாளர். காவல் நிலையத்தில் அவர் புகார் பதிவு செய்தார். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையயில் இறங்கினர். இதற்காக சுமார் 5000 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    வீடு வீடாக சோதனை

    மெட்ரோ ரயில் நிலையத்தையொட்டியுள்ள குடிசை பகுதியில் சல்லடை போட்டு போலீசார் தேடினர். அப்போது அகிலேஷ் குமார் என்ற அந்த குற்றவாளி பிடிபட்டார். அவர் டீ ஸ்டால் ஒன்றில் உதவியாளராக வேலை பார்ப்பவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அதே நாளில் மற்ரொரு பெண்ணையும் அகிலேஷ்குமார் சீண்டியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    English summary
    A 25-year-old journalist, was molested by a man at a Metro station in New Delhi on Monday evening, following which the accused was arrested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X