For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல்.. அதே இடத்தில் பலி.. டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல் காரணமாக அந்த நபர் அதே இடத்தில் பலியாகி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் பைக்கில் சென்றவர் மீது கொட்டிய மர்ம கெமிக்கல் காரணமாக அந்த நபர் அதே இடத்தில் பலியாகி உள்ளார்.

டெல்லியில் காசியாபாத் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. காசியாபாத் அருகே உள்ள ஜோரி என்க்லேவ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

இது எப்படி நடந்தது என்று போலீசுக்கு தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நடந்தது என்ன

நடந்தது என்ன

அமித் சவுகான் என்ற 37 வயது நபர் தன்னுடைய பைக்கில் சென்ற போதே, மேலே இருந்து சாரல் போல கெமிக்கல் ஒன்று கொட்டி இருக்கிறது. இதனால் நிலை தடுமாறிய அவர் கீழே விழுந்துள்ளார். அருகே பைக்கில் வந்த 17 வயது நிரம்பிய ராகுல் என்பவரும் இதில் காயம் பட்டு இருக்கிறார்.

இறந்தார்

இறந்தார்

இவர்களை வெகுவேகமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள். இவர்கள் உடலில் அந்த கெமிக்களால் காயம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் சவுகான் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார் என்று கூறப்பட்டுள்ளது. ராகுல் மோசமான காயங்களுடன் தப்பித்து இருக்கிறார். இவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

மெட்ரோ பணி

மெட்ரோ பணி

இவர்கள் பைக் ஓட்டி சென்ற இடத்திற்கு மேல் புதிய மெட்ரோ பணிகள் நடந்து வருகிறது. இதில் இருந்து இந்த கெமிக்கல் கொட்டி இருக்குமா என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளது.

விளக்கம் அளித்துள்ளார்

விளக்கம் அளித்துள்ளார்

இந்த நிலையில் டெல்லி மெட்ரோ நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. மெட்ரோ பணியில் எந்த கெமிக்கலும் பயன்படுவதில்லை என்றுள்ளனர். இதற்கு வேறு காரணம் இருக்கலாம், அதை போலீஸ் விசாரிக்க வேண்டும் என்றுள்ளனர்.

English summary
A biker dies by Acid bizarrely in Delhi. Police started the investigation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X