For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பதி தெப்பக்குளத்தில் மிதந்த ஆண் பிணம்- அதிர்ச்சியில் பக்தர்கள்

Google Oneindia Tamil News

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் தெப்பக்குளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்ததையடுத்து பக்தர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

நேற்று முன்தினம் பக்தர்கள் திருப்பதி தெப்பக்குளத்தில் நீராடி கொண்டிருந்தனர். அப்போது, அடையாளம் தெரியாத ஆண் பக்தரின் பிணம் ஒன்று மிதந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பக்தர்கள் திருமலை, திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளுக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.

A body floats in Tirupati pool

இதனையடுத்து திருமலை தீயணைப்புப்படை வீரர்கள், போலீசார், தேவஸ்தான அதிகாரிகள் ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். தீயணைப்புப்படை வீரர்கள் ஆண் பிணத்தை மீட்டனர். பிணமாக கிடந்த பக்தர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமலை அஸ்வினி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெப்பக்குளத்தில் ஆகம விதிப்படி தோஷ நிவர்த்தி பூஜை செய்து பால் ஊற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
An unknown body of a devotee floated in Tirupati pool, people feared.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X