இந்தியாவில் முதல் முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் பலி.. இந்தூரில் சோகம்
இந்தூர்: இந்தியாவில் முதல்முறையாக கொரோனாவுக்கு மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000-ஐ தாண்டியது. பலியானோர் எண்ணிக்கை 150-ஐ தாண்டியது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 213 ஆக இருந்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் இந்தூர் மருத்துவமனையில் இன்று பலியாகிவிட்டார். இதன் மூலம் கொரோனாவுக்கு முதல் முறையாக மருத்துவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் சில மருத்துவர்கள் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது பாதிக்கப்படுகிறார்கள். அது போல் அவர்களில் வெளிநாட்டுக்கு சென்றுவிட்டு தாயகம் திரும்பியோரும் உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணர்ந்து அரசுக்கு எச்சரித்த டாக்டர் லீ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.