For Daily Alerts
Just In
வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து -12 பேர் பலி; 50 பேர் கதி என்ன?
வாரணாசியில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 12 பேர் பலியாகினர்.
வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் புதியதாக கட்டப்பட்ட மேம்பாலம் இடிந்து விழுந்து 12 பேர் பலியாகினர். இடிபாடுகளில் சிக்கிய 50 பேர் கதி என்ன என்று தெரியவில்லை.
வாரணாசியின் கண்டோமென்ட் ரயில்வே ஸ்டேஷன் அருகே புதியதாக ஒரு மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த மேம்பாலம் திடீரென இடிந்து விழுந்தது.
இடிந்து விழுந்த மேம்பாலம் சுமார் 1 கிலோ மீட்டர் நீளமுள்ளது. இந்த இடிபாடுகளில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் 12 பேர் பலியானதாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அப்பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
Comments
English summary
More than 12 people dead, several feared trapped after portion of an under construction flyover collapses in Varanasi's Cantt. area.