For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

என்னா ஒரு கோபம்.. வாக்குவாதம் செய்தவரை..ஜேசிபி கொண்டு தாக்கிய டிரைவர்.. தெலுங்கானாவில்!

Google Oneindia Tamil News

முழுகு: தெலுங்கானாவில் இருவர் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், ஜேசிபி இயந்திரத்தின் முன் பக்கம் இருக்கும் மணல் அல்லும் பக்கெட் கொண்டு மது போதையில் இருந்தவரை தாக்கிய ஜேசிபி ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

தெலுங்கானா மாவட்டத்தில் முழுகு என்ற இடத்தில் மரத்தின் கீழே ஒருவர் நின்று கொண்டு இருக்கிறார். அவருக்கும், அந்த இடத்தில் பணியாற்றிக் கொண்டு இருக்கும் ஜேசிபி ஓட்டுநருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த ஜேசிபி ஓட்டுநர் ஜெசிபி இயந்திரத்தின் மணல் அள்ளும் முன் பாகத்தால் மது போதையில் இருந்தவரின் தலையில் ஓங்கி அடிக்கிறார். அதில் நிலை தடுமாறி மதுபோதையில் இருந்தவர் கீழே விழுகிறார். இந்த சம்பவம் கடந்த 7ஆம் தேதி நடந்துள்ளது.

A JCB driver hits a man with its front bucket in Telangana Mulugu FIR booked

இதுகுறித்து மாங்கபேட்டை போலீஸ் எஸ்ஐ கூறுகையில், ''மது போதையில் இருந்தவர் ஜேசிபி ஓட்டுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து கோபமடைந்த ஜேசிபி ஓட்டுநர் வாக்குவாதம் செய்தவரின் தலையில் ஜேசிபி இயந்திரத்தின் முன் பகுதியால் தாக்கியுள்ளார். இதில் அவர் கீழே விழுந்தார். இதுகுறித்து ஜேசிபி ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை! மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை!

English summary
A JCB driver hits a man with its front bucket in Telangana Mulugu FIR booked
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X