என்னை அவமானப்படுத்தி விட்டார்கள்.. கோஹ்லி, அனுஷ்கா சர்மாவிற்கு நோட்டிஸ் அனுப்பிய இளைஞர்!
கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு இளைஞர் ஒருவர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: கோஹ்லி மற்றும் அனுஷ்கா சர்மாவிற்கு இளைஞர் ஒருவர் நோட்டிஸ் அனுப்பி இருக்கிறார்.
டெல்லியை சேர்ந்த அர்ஹான் சிங் என்ற தொழிலதிபர் ஒருவர் இந்த நோட்டிஸை அனுப்பி உள்ளார். தன்னை கோஹ்லி அனுஷ்கா இருவரும் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று நோட்டிஸில் குறிப்பிட்டுள்ளார்.
அவரை குறித்து சமூக வலைதளத்தில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா வீடியோ ஒன்று வெளியிட்டனர்.இந்த வீடியோதான் பிரச்சனைக்குள்ளாகி உள்ளது.
என்ன
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோஹ்லியும் அனுஷ்காவும் தங்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோவை பதிவேற்றி இருந்தார்கள். அதில், அனுஷ்கா சர்மா, காரில் வந்து குப்பை கொட்டிய ஒருவரை திட்டுவதாக வீடியோ பதிவாகி இருந்தது. அவரிடம் ஏன் இப்படி குப்பை போடுகிறீர்கள் என்று அனுஷ்கா கோபமாக கேட்டு இருந்தார்.
|
வைரல்
அந்த வீடியோ மிகவும் வைரல் ஆகி இருந்தது. பலரும், அனுஷ்காவை பாராட்டி இருந்தனர். சிலர் அவர்கள் செய்தது தவறு என்றும் குறிப்பிட்டு இருந்தனர். இந்த வீடியோ இணையம் முழுக்க பெரிய அளவில் வைரல் ஆனது. அந்த வீடியோவில் இருப்பது, அர்ஹான் சிங் என்ற பணக்கார நபர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது.
வழக்கு தொடுத்துள்ளார்
இந்த நிலையில் அர்ஹான் சிங், கோஹ்லி மற்றும் அனுஷ்கா மீது வழக்கு தொடுத்துள்ளார். இருவரும் தன்னை அவமானப்படுத்தியது குறித்து விளக்கம் கேட்டும் சம்மன் அனுப்பியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
அர்ஹான் சிங் கோபம்
இதுகுறித்து அர்ஹான் சிங் பேட்டியளித்துள்ளார். அதில் ''என்னை பொதுவில் சமூக வலைதளத்தில் கோஹ்லியும், அனுஷ்காவும் அவமானப்படுத்திவிட்டார்கள். அவர்களுக்கு எதிராக தற்போது வழக்கு தொடுத்து இருக்கிறேன். இதில் நீதிமன்றம்தான் தீர்ப்பளிக்க வேண்டும். இப்போதைக்கு இதற்கு மேல் இதில் கருத்து கூற விரும்பவில்லை'' என்றுள்ளார்.