திருமணம் முடிந்த காதலியை பலாத்காரம் செய்ய முயன்ற முன்னாள் காதலன்.. நாக்கை வெட்டி கிடாசிய காதலி
திருமணம் முடிந்த பிறகும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் ஒருவர் வெட்டி கிடாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
லக்னோ: திருமணம் முடிந்த பிறகும் பாலியல் தொல்லை கொடுத்துவந்த முன்னாள் காதலனின் நாக்கை பெண் ஒருவர் வெட்டி கிடாசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரு பெண்னை காதலித்து வந்தார். இந்த நிலையில் அவரது காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்தது.
அந்த பெண் தனது கணவருடன் பைசாபாத் இனாயாத் நகரில் வசித்து வந்தார். அங்கு சென்று தனது முன்னாள் காதலியுடன் வாலிபர் சண்டை போட்டு உள்ளார்.
பலாத்காரம் செய்ய முயற்சி
மேலும் திருமணம் ஆன தனது முன்னாள் காதலியை அவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், முன்னாள் காதலனுக்கு தக்க பாடம் கற்பிக்க முயன்றார்.
நாக்கை துண்டித்தார்
இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் மீண்டும் வீட்டிற்கு வந்து தகராறு செய்தார் முன்னாள் காதலன். இதனை பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அந்த பெண் முன்னாள் காதலனின் நாக்கை துண்டித்து விட்டார்.
தப்பியோடிய இளைஞர்
வெட்டுப்பட்ட நாக்கு கீழே கிடந்து உள்ளது. ஆனால் காதலன் ஓடி விட்டான். இந்த சம்பவம் குறித்து அறிந்த பாதிக்கபட்டவரின் தாயார் முன்னாள் காதலியின் வீட்டுக்கு சென்று சண்டைபோட்டு உள்ளார்.
பலாத்காரம் செய்ய முயன்றதால்
பின்னர் வெட்டுபட்ட நாக்கை எடுத்து கொண்டு போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்து உள்ளார். முன்னாள் காதலி போலீசில் தனது முன்னாள் காதலன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் அதனால் தான் அவரது நாக்கை வெட்டியதாகவும் கூறினார்.
பெரும் அதிர்ச்சி
நாக்கு வெட்டப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.