3 முறை வெடித்து சிதறல்.. 10 கிமீ கேட்ட சத்தம்.. குஜராத் ஓஎன்ஜிசி ஆலையில் பயங்கர தீ விபத்து
சூரத்: குஜராத்தின் சூரத்தில் உள்ள எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக (ஓ.என்.ஜி.சி) ஆலையில் இன்று அதிகாலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ இப்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்தவிதமான சேதமோ அல்லது காயமோ ஏற்படவில்லை என்று ஓ.என்.ஜி.சி தெரிவித்துள்ளது..
ஆரம்ப தகவல்களின்படி, அதிகாலை 3:30 மணியளவில் சூரத்தில் உள்ள ஹசிராவை தளமாகக் கொண்ட ஓ.என்.ஜி.சி ஆலையின் இரண்டு முனையங்களில் தொடர்ந்து மூன்று முறை குண்டு வெடித்தது போல் வெடித்து சிதறியது. இந்த பயங்கர வெடிப்பை தொடர்ந்து பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
ஹசிரா எரிவாயு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்த தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவர தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். காலையில் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. எந்தவொரு நபருக்கும் எந்தவிதமான சேதமோ காயமோ இல்லை" என்று ஓ.என்.ஜி.சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
#WATCH Gujarat: A fire breaks out at an Oil and Natural Gas Corporation (ONGC) plant in Surat. Fire tenders present at the spot. More details awaited. pic.twitter.com/6xPKHW5PrR
— ANI (@ANI) September 23, 2020
ஹசிரா எண்ணெய் ஆலையில் வெடித்து சிதறிய சத்தம் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.