விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் பயங்கர தீ விபத்து- தீயை அணைக்கும் பணி தீவிரம்
விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து கம்பெனி ஒன்றில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
விசாகப்பட்டினத்தில் அண்மையில் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் வாயு கசிவு ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக பலியாகினர்.
102 எம்எல்ஏக்களின் ஆதரவா?.. கெலாட் சொல்வது சுத்த பொய்.. மல்லுக்கட்டும் சச்சின் பைலட்
இந்த நிலையில் இன்று நள்ளிரவில் மருந்து கம்பெனி ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது பயங்கர வெடிசப்தங்கள் கேட்டன.
இதில் அப்பகுதியை சேர்ந்த பலர் படுகாயமடைந்தனர். 12 தீயணைப்பு வண்டிகள் அப்பகுதிக்கு விரைந்தன. இ த்தீவிபத்தின் போது பணியில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
இருப்பினும் அப்பகுதியை சேர்ந்த பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.