For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்கம்பக்க பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகன்.. தாய் செய்த காரியத்தை பாருங்க!

அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை கொன்ற தாய்- வீடியோ

    பாட்னா: அக்கம்பக்க வீட்டு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மகனை பெற்ற தாயே கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ளார்.

    பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ரேணு தேவி. 46 வயதான இவருக்கு 25 வயதில் மின்டு ராம் என்ற மகன் ஒருவர் உள்ளார்.

    மின்டுவுக்கு திருமணமாகிவிட்டது. அஞ்சுதேவி என்ற மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

    பாலியல் தொல்லை

    பாலியல் தொல்லை

    இந்நிலையில் மின்டு அக்கம்பக்கத்தில் உள்ள பெண்களை கேலி கிண்டல் செய்வதும் அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதுமாய் இருந்துள்ளார். மேலும் அப்பகுதியில் கடன் பெற்று கொண்டு அதனை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றியும் வந்துள்ளார்.

    மனஉளைச்சலில் தாய்

    மனஉளைச்சலில் தாய்

    மேலும் தாயார் ரேணு தேவியையும் அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் கடுமையான மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார் ரேணு.

    கொலை செய்ய திட்டம்

    கொலை செய்ய திட்டம்

    ஒரு கட்டத்தில் மின்டுவின் சேட்டைகள் எல்லை தாண்டவே அவரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார் ரேணுதேவி. இதற்காக கூலிப்படையை ஏவி கொலை செய்ய திட்டம் தீட்டினார் அவர்.

    மின்டு சுட்டு கொலை

    மின்டு சுட்டு கொலை

    தரம் வீர், சரவண்குமார் ஆகியோரிடம் 50 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்த அவர், மகனை கொலை செய்யுமாறு கூறியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் மின்டுவை சுட்டு கொன்றனர்.

    மாமியார் மீது சந்தேகம்

    மாமியார் மீது சந்தேகம்

    இந்த கொலை குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மின்டுவின் மனைவி, தனது கணவர் கொலையில் மாமியார் மீது சந்தேகம் இருப்பதாக கூறினார்.

    கொலையை ஒப்புக்கொண்டார்

    கொலையை ஒப்புக்கொண்டார்

    இதையடுத்து போலீசாரின் சந்தேகம் ரேணுதேவியின் பக்கம் திரும்பியது. போலீசார் விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்த ரேணுதேவி பின்னர் கொலையை ஒப்புக்கொண்டார்.

    அதிர்ச்சி சம்பவம்

    அதிர்ச்சி சம்பவம்

    இதையடுத்து அவரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். பெற்ற மகனை தாயே கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    A mother kills son for giving sexual torture to girls in Bihar. Mother has been arrested by the police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X