சாமியார்களுக்கு எதிராக சதி நடக்கிறதாம்.. டிவிட்டரில் பொங்கும் சு.சாமி
டெல்லி: சாமியார்களை சிறைக்கு அனுப்பி விட்டு ஆசிரம சொத்துக்களை அனுபவிக்க சதி நடப்பதாக பாஜக ராஜ்யசபா உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாமியார் ராம் ரஹிம் பாலியல் வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த டிவிட்டை சு.சாமி வெளியிட்டுள்ளார். சாதுக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அரசியல்வாதிகளும், ஆசிரமவாசிகளும் சுவாமிகளை சிறைக்கு அனுப்பிவிட்டு ஆசிரம சொத்துக்களை கபளீகரம் செய்ய விரும்புவதாக கூறியுள்ள சு.சாமி, சாதுக்கள் தங்களுக்கு வாரிசுகளை ஏற்படுத்துவது அவசியம் என கூறியுள்ளார்.
பஞ்சாப் முதல் டெல்லிவரை ராம் ரஹிம் ஆதரவு குண்டர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தி வரும் நிலையில் சு.சாமி வெளியிட்ட இந்த டிவிட்டுக்கு நெட்டிசன்கள் தீவிர எதிர்வினையாற்றி வருகிறார்கள்.
A new threat to Sadhus: Politicians& ashramites wanting to grab Ashram wealth by sending the Swamijis to jail. Sadhus must groom successors
— Subramanian Swamy (@Swamy39) August 25, 2017