For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையான டெல்லி மாணவன்.. அம்மா, அப்பா, தங்கையை கொன்ற கொடூரம்!

ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி போன மாணவன் ஒருவன், தனது பெற்றோர்களை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி கொலை செய்த டெல்லி மாணவன்- வீடியோ

    டெல்லி: ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி போன மாணவன் ஒருவன், தனது பெற்றோர்களை கொலை செய்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தற்போது ஆன்லைன் விளையாட்டு மிக பிரபலம். ராணுவ தாக்குதல் போல இருக்கும் இந்த விளையாட்டு கூட்டம் கூட்டமாகவோ இல்லை தனியாகவோ ஒரு குறிப்பிட்ட இடத்தில் எதிராளி மீது துப்பாக்கியால் தாக்குதல் நடத்தும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கும் ஆன்லைன் விளையாட்டு ஆகும்.

    இதற்கு தற்போது தமிழக இளைஞர்கள் அதிக அளவில் அடிமை ஆகியுள்ளனர். இந்த நிலையில் இந்த விளையாட்டு காரணமாக பெரிய கொலை சம்பவம் ஒன்று டெல்லியில் நடந்துள்ளது.

    கொலை செய்தான்

    கொலை செய்தான்

    டெல்லியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவன் சுராஜ்தான் இந்த கொலையை செய்துள்ளது. தன்னுடைய அப்பா மிதிலேஷ், அம்மா சியா மற்றும் தங்கையை இவன் கொலை செய்துள்ளான். கத்தியால் குத்தியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்து இருக்கிறான். இவனை டெல்லி போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

    நாடகம் ஆடினான்

    நாடகம் ஆடினான்

    முதலில் இவன் கொலை செய்துவிட்டு, வீட்டில் திருட வந்தவர்கள் கொன்றது போல நாடகம் ஆடியுள்ளான். வீட்டில் இதற்காக சில பொருட்களை வெளியே விற்றுவிட்டு, திருடு போனது போல இடத்தை மாற்றி வைத்துள்ளான். ஆனால் போலீசின் தொடர் விசாரணையில் இவன் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளான். மூன்று பேரையும் தான்தான் கொன்றது என்று ஒப்புக் கொண்டு இருக்கிறான்.

    கேமிற்கு அடிமை

    கேமிற்கு அடிமை

    இவன் கடந்த சில மாதங்களாக அந்த ஆன்லைன் கேமிற்கு அடிமையாகி இருந்துள்ளான். இதற்காக வீட்டில் இருந்து காசு திருடி தனி வீடு கூட எடுத்துள்ளான். அந்த வீட்டில்தான் தன் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்துள்ளான். இதற்காக பல நாட்கள் கல்லூரி செல்லாமல் கட் அடித்துவிட்டு சுற்றியுள்ளான்.

    மிகவும் மோசம்

    மிகவும் மோசம்

    இவன் வீட்டில் உள்ளவர்களுடன் அடிக்கடி சண்டை போடுவான் என்று பக்கத்துவீட்டில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக மிக மோசமாக நடந்து கொண்டான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இவன் நேற்று 3 மணிக்கு குடும்ப உறுப்பினர்களை கொலை செய்துள்ளான். தங்கையை கழுத்தறுத்து கொன்றுள்ளான்.

    எதனால்

    எதனால்

    இந்த ஆன்லைன் விளையாட்டு சுடுவது, கொல்வது என்று முழுக்க முழுக்க வன்முறையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் விளையாட்டு ஆகும். இதன் காரணமாகவே இவனின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மனநல மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

    English summary
    A online game addicted student killed his Parents and Sister in Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X