திருடியதாக சந்தேகம்.. 14 வயது சிறுவனை தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து துவைத்த முதலாளி
உத்தரப்பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாக கூறி 14வயது சிறுவனை உரிமையாளர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இரும்பு குழாய்களை திருடியதாக கூறி 14வயது சிறுவனை உரிமையாளர் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத்தில் இரும்பு குழாய்களை சேமித்து வைக்கும் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்கில் இரும்பு குழாய்களை திருடிசென்றதாக 14 வயது சிறுவன் மீது அந்த கிடங்கின் உரிமையாளர் போலீசாரிடம் புகார் அளித்தார்.
ஆனால் இதற்கு ஆதாரம் இல்லாததால் போலீசார் அந்த சிறுவன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த சிறுவனை தனது கிடங்கிற்கு அழைத்து சென்ற உரிமையாளர் சிறுவனை தலைக்கீழாக கட்டி தொங்கவிட்டு அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
இந்த கொடூர செயலை அந்த கிடங்கில் வேலைப்பார்த்த தொழிலாளர்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து அந்த கிடங்கின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர்.